சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் என்றும் பசுமை நிறைந்த வெற்றிகளான, அண்ணாமலை, பாட்ஷா, வீரா திரைப்படங்களின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, மேற்கண்ட திரைப்படங்களின் திரையாக்கத்தை இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புத்தக வடிவில் பதிவு செய்துள்ளார்.
அனைத்து விதமான சுவாரசிய சம்பவங்களும், ‘பன்ச்’ வசனங்கள் உருவான விதமும், இசை மெட்டுக்கள் உருவான விதமும், இசைக்கோர்ப்புகளின் சூழலும், சண்டைக் காட்சிகளின் சூழ்நிலை விவாதங்களும் எளிய நடைமுறையில் இடம் பெற்றுள்ளன.
அது மட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் மறுபக்கம், தினரி படப்பிடிப்பு முடிந்ததும், அவர் எப்படி இருப்பார், ‘மேக்கப்’ புடன் இருக்கும் போது அவருடைய கதாபாத்திரத்துடன் ஒன்றி இருக்கும் மனநிலை, வெள்ளோட்ட காட்சியின் போது ஏற்படும் பதட்டம், முதல் பட நடிகன் போன்ற அவரின் செயல்பாடுகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
ஒரு சாதாரண மனிதனாக, அசாதாரண உச்சநட்சத்திரம் ரஜினிகாந்தைப் பற்றிய இப் புத்தகம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகளில் வெளிவருகிறது.
‘பாஷாவும் நானும்’ என இப்புத்தகத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.
‘My Days With Baasha’என்ற ஆங்கில புத்தகத்தின் இணையெழுத்து படைப்பாளியாக இந்து நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் மாலதி ரங்கராஜன், எழுத்தில் உதவியுள்ளார்.