விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி நேற்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இன்று தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் தமிழக அரசு பிறப்பித்த தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது.
இதனால், விஸ்வரூபம் வெளியாவதில் உள்ள சிக்கல் தொடர்ந்து நீடிக்கிறது.
இறுதி விசாரணை 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.