நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் – சினேகா

snehaதிருமணத்திற்கப் பிறகு சினேகா நடித்து வெளிவந்த படம் ‘ஹரிதாஸ்’. இந்த படத்தில் மிகவும் கண்ணியமான ஒரு ஆசிரியை வேடத்தில் நடித்திருந்தார் சினேகா.

தொடர்ந்து இதே மாதிரியான வேடங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு புதிய கதை ஒன்றை கேட்டாராம். நல்ல கதைதான், ஆனால், அதில் கணவன், மனைவிக்கு இடையேயான அன்யோன்யமான, நெருக்கமான படுக்கைக் காட்சிகள் இருந்ததால் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.

திருமணத்திற்குப் பிறகு இம் மாதிரியான காட்சிகளில் நடித்தால், அது குடும்ப உறவை சீர் குலைத்து விடும் என்கிறார் சினேகா.

 

Read Previous

கிளாமரில் போட்டி இல்லை – அஞ்சலி

Read Next

மணிவண்ணனின் அடுத்த படம் ‘தாலாட்டு மச்சி தாலாட்டு’

Most Popular