தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.
எதையும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர் என தெலுங்குத் திரையுலகில் பெயர் எடுத்தவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு பணமும்தான் முக்கியம், ” என கூறியுள்ளார்.
“சில படங்களை நல்ல கதைகளுக்காக தேர்ந்தெடுக்கிறேன். சில படங்களை நல்ல கதாபாத்திரங்களுக்காக தேர்ந்தெடுக்கிறேன். அதே சமயம், சில படங்களை நல்ல சம்பளம் தருகிறார்கள் என்பதற்காகவும் தேர்ந்தெடுக்கிறேன், ” என ஓபனாக பதிலளித்துள்ளார்.
“எனக்கு பணமெல்லாம் முக்கியமில்லை, கதாபாத்திரம்தான் முக்கியம்” என வார்த்தைக்கு வார்த்தை பொய் பேசும் சிலருக்கு மத்தியில் சமந்தா உண்மையாகவே வித்தியாசமானவர்தான்.
அப்படியே…பணத்துக்காக எந்த படத்துல நடிச்சீங்கன்னு சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்…