‘வாட்ச்மேன்’ – குழந்தைகளையும் கவரும் படம்…

டபுள் மீனிங் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் ‘வாட்ச்மேன்’.

விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசுகையில்,

“எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம்தான் ‘வாட்ச்மேன்’. இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார். அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தது எங்களுக்குக் கிடைத்த வரம். இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக இந்த ‘வாட்ச்மேன்’ இருக்கும்,” என்றார்.

படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும் போது,

“இந்தப் படத்தில் ஒரு நாய் கதாபாத்திரம் இருக்கிறது. அந்த நாய் எப்படி சொல்லிக் கொடுத்த மாதிரி இப்படி நடிக்கிறது என மிகவும் ஆச்சரியமாக இருந்தது,” என்றார்.

நடிகர் சுமன் பேசுகையில்,

“இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரத்தையும், அதைச் சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய் அவர்களுக்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது. இயக்குனர் விஜய் ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளை செய்து வருகிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் பல பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் எப்படி நடிப்பார் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். படப்பிடிப்பு தளத்துக்கு வந்தால் காட்சியைஙப பற்றி ஒரு முறை கேட்பார், நடித்துக் காட்டுவார். அவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். ஐதராபாத்தில் 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன்,” என்றார் நடிகர் சுமன்.

இயக்குனர் விஜய் பேசுகையில்,

“ஒரு இயக்குனருக்கு ஒவ்வொரு படமும் முக்கியமான படம். அருண்மொழி மாணிக்கம் எனக்கு 5 ஆண்டுகளாக நண்பர். அவர் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. ராஜ் அர்ஜூன் ‘தாண்டவம், தலைவா’, இந்தியில் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படங்களில் நடித்தவர். வாட்ச்மேன் படத்தை பார்த்தால் அவர் பக்கத்தில் போக எல்லோரும் பயப்படுவார்கள். சுமன் சார் சின்ன வயதில் இருந்து எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ. அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அணுகியபோது, புதுமையாக இருக்கிறது எனக்கூறி உடனடியாக ஒப்புக் கொண்டார். ஜிவி பிரகாஷ் வளர்ச்சி எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள். அவர் ஒரு நடிகராக மிகப்பெரிய உயரத்துக்கு சென்றிருக்கிறார். இது ஒரு நல்ல படமாக இருக்கும்,” என்றார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில்,

“நாச்சியார்’ படத்தில் என் கதாபாத்திரத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் விஜய் சார் தான். அவருக்கு 9 படங்களில் இசையமைத்திருக்கிறேன். இப்போது அவர் இயக்கத்தில் நடிகனாக நடித்திருக்கிறேன். ஒரு ஸ்டைலிஷ் படமாக உருவாக்க ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் கடுமையாக உழைத்திருக்கிறது. கோடை விடுமுறையில் குழந்தைகளைக் கவரும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும்,” என்றார்.

‘வாட்ச்மேன்’ ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

Read Previous

அக்கா குருவி – தமிழில் ரீமேக் ஆகும் சில்ட்ரன் ஆப் ஹெவன்

Read Next

சூர்யா நடிக்கும் 38வது படம் ஆரம்பம்

Most Popular