வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘அயோக்யா’.
இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் 1993ம் ஆண்டில் பார்த்திபன் இயக்கம் நடிப்பில் வெளிவந்த ‘உள்ளே வெளியே’ படத்தின் கதை போல இருப்பதாகச் சொன்னார்கள். சில விமர்சனங்களும் அப்படியே குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை இது பற்றி பார்த்திபன் குற்றச்சாட்டுப் பதிவு போல ஒன்று போட்டிருந்தார்.
'அயோக்கியா'த்த்தனம்!
94-ல் வெளியான என் ginal ginal original 'உள்ளே வெளியே'படத்தை In&out லவுட்டிTemper'(Rights பெறாமல்) தெலுங்கில் Hit ஆக்கி தமிழிலும் தற்போது!அதில் என்னையும் நடிக்க வைத்து என்ன ஒரு'அ-தனம்'?குற்ற உணர்ச்சி இல்லாமல் எப்படி?வழக்கு செய்யாமல்,பெருமையுடன் பதிவிடுகிறேன pic.twitter.com/PVgQYEkxGY— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 12, 2019
அதன் பிறகு அவரது டுவிட்டர் பதிவு பரபரப்பான செய்தியானது. சற்று முன்னர் காலையில் தான் பதிவிட்டது படத்திற்கான ஒரு விளம்பர யுத்தி எனக் குழப்பும் விதத்தில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.
ஒப்பீட்டால் ரிப்பீட்டாகும் audience!
'அயோக்கியா'-என் பதிவு ஒரு விளம்பர யுத்தி என்பதை யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என யோசித்துக் கொண்டிருந்தேன்.Goodவேளை!
'Temper'வரும்போது தெரியாது,
தமிழாகும் போது தெரியும்.இதை
கூடிப்பேசி கூத்தடிப்போம் Shooting spot-ல்.Mr vishalக்கும் எனக்கும் pic.twitter.com/AawOxRV7kl— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 12, 2019
.Mr vishalக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை! இப்போதும் வழக்காட வரவில்லை.வழக்கமான என் (100%உண்மையான)அக்மார்க் அக்குறும்பே!கெட்ட போலீஸ்,ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்!இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே!Doubt-ன்னா பாருங்க ….
yeah AYOGYA! pic.twitter.com/0a08gISxgZ— Radhakrishnan Parthiban (@rparthiepan) May 12, 2019
படக்குழுவிலிருந்து யாராவதோ அல்லது நடிகர் விஷாலே பார்த்திபனின் காப்பி பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள், அதனால்தான் சமாளிப்பதற்காக பார்த்திபன் இப்போது இப்படி ஒரு பதிவைப் போட்டிருக்கிறார் என்று அதில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
‘அயோக்யா’ படம் தெலுங்கில் வெளிவந்த ‘டெம்பர்’ படத்தின் ரீமேக். ‘டெம்பர்’ படத்தை தன் ‘உள்ளே வெளியே’ படத்திலிருந்து காப்பி அடித்து எடுத்திருக்கிறார்கள் என்று காலையில் பதிவிட்டார் பார்த்திபன்.
அவரே ஆரம்பித்த ஒரு பிரச்சினையை அவரே முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.