கதைச் சுருக்கம் நண்பன் ஆதவனை, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயிலில் வழியனுப்ப வருகிறார் நாயகன் மிதுன். அப்போது நாயகி மிருதுளாவைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். வழியனுப்ப வந்தவர் ரயிலில் பயணிக்க ஆரம்பிக்கிறார். அதோடு மிருதுளாவின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறார். நாகர்கோவில் செல்வதற்குள் அவரது காதல் முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் ரயிலிலேயே முழு கதையும் நகர்வது சுவாரசியமாக இருக்கிறது. அந்த இரண்டரை மணி நேரத்திலும் சுவாரசியமான காட்சிகளுடன் படத்தை நகர்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குனர் என்.ராஜேஷ்குமார். ஒளிப்பதிவாளர் என்.எஸ்.ராஜேஷ்ஷமார் ரயிலில் படமாக்குவதில் கடுமையாக உழைத்திருக்கிறார். அதற்கான அவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – என். ராஜேஷ்குமார் இசை – விஜய் பெஞ்சமின் பாடல்கள் – ராகுல்பிரசாத், ஹாஜாமுகம்மது ஒளிப்பதிவு – என்.எஸ். ராஜேஷ்குமார் நடனம் – அஜெய் சிவசங்கர், மது.ஆர் எடிட்டிங் – ஏ.கெவின் தயாரிப்பு நிர்வாகம் – டி.வி.ஜனார்த்தனன், குட்டிகிருஷ்ணன் மக்கள் தொடர்பு – மௌனம் ரவி தயாரிப்பு – கே. சுந்தரராஜன், கே. பாலசுப்ரமணியன், என். ராஜேஷ்குமார் வெளியான தேதி – 30 அக்டோபர், 2015