கோபம், ஏமாற்றம், பேராசை, இன்பம், சலனம் இவை அனைத்தும் நமக்கும் நம் மனதிற்கும் புதிதல்ல அதனால் ஏற்படும்குற்றங்களும் தவறுகளும் தான் புதிது.
நம்மை அதிர்ச்சியடைய வைத்த சில நிகழ்வுகள் வெறும் செய்தியாகவே நம்மைக் கடந்து போயுள்ளன. அப்படி கடந்து சென்ற சில நிகழ்வுகள் ஒருநாள் நம் வாழ்க்கையிலும் நிகழ்ந்தால் என்ன ஆகும் .
அதனால் ஏற்படும் மாற்றம் நம் வாழ்க்கையையே திருப்பி போடுமானால் நம்மில் அது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் பின்னணியில் இருக்கும் உண்மையும் பொய்யும் என்ன என்பதை அலசும் ஒரு தளம் தான் ‘கண்ணாடி’.
அமித் பார்கவ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
பல்வேறு திருப்பங்கள் மற்றும் திகில் கலந்து உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சி சமூகத்தின் தற்போதைய நிலைமையை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும்.