பாலாஜிமோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மாரி 2’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. அதனால், படத்தின் பாடல்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்காக யுவன் இசையில் இளையராஜா பாடிய பாடல் ஒன்று நேற்று பதிவு செய்யப்பட்டது. படத்திற்காக பதிவு செய்யப்பட்ட அந்த முதல் பாடலை எழுதியவர் தனுஷ். அப்போது படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ் உடனிருந்தனர்.
இது குறித்த மகிழ்ச்சியை தனுஷ் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “மகிழ்ச்சிகரமான, தெய்வீகமான அனுபவம். நாங்கள் ஆசீர்வாதம் பெற்றவர்களாகவும், சிலிர்ப்பாகவும் உணர்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
So happy to announce that the maestro isaignani ilayaraja sir sang a song today for #maari2. What a delightful divine experience. We feel so blessed and super thrilled. @thisisysr @directormbalaji pic.twitter.com/6pNRj09aZ7
— Dhanush (@dhanushkraja) January 16, 2018
‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.