அனுஷ்கா, இன்று தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் அநேக ரசிகர்கள் உச்சரிக்கும் பெயர்.
அந்த அளவிற்கு இரு மொழி ரசிகர்களையும் தன்னுடைய அழகால் கட்டிப் போட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அழகுதான் ஒரு நடிகைக்கு ரசிகர்களிடம் ஈர்ப்பைத் தரும் என்றாலும் நடிப்பு என்று வரும் போது எத்தனை பேர் உண்மை பேசுவார்கள்.
ஆனால், இந்த ‘அழகுக்கிளி அனுஷ்கா’ நடிப்பைப் பற்றிய உண்மையை பேசியுள்ளது.
“அருந்ததி படத்தில் நடிப்பதற்கு முன்னால் எனக்கு நடிக்கவே தெரியாது. அந்த படத்தில் அவ்வளவு சிறப்பாக நடித்து பெயர் வாங்கியதற்குக் காரணமானவர் இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா. எனக்குள் இருந்த சிறப்பான, திறமையான நடிப்பை வெளிக் கொணர்ந்தவர் அவர்தான்.”
இப்போது தெரிகிறதா அனைவரும் அதிகம் நேசிக்கும் நாயகியாக அனுஷ்காஇருப்பதற்கு.
‘இதுக்குப் பேர்தான் குரு பக்தி’.