தலைப்பைப் படிக்க கொஞ்சம் குழப்பமாதான் இருக்கு இல்லை. ஆனால், சிவகார்த்திகேயன் அப்படித்தான் சொல்றாரு…
விஜய் டிவி காலத்திலிருந்தே அவருக்கும் சந்தானத்திற்கும் பகையோ பகை என்கிறார்கள் அவர்கள் கூடவே இருந்தவர்கள்.
ஆனால், சிவகார்த்திகேயன் அதை துளி கூட வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
“நமக்கு ஒருத்தரை எதிரின்னு ஃபிக்ஸ் பண்ணிலாம் வச்சிக்க முடியாது. அவரை தோற்கடிச்சிட்டால், அப்புறம் நாம ஏதோ ஒரு பெரிய சாதனை பண்ணிட்ட மாதிரியே ஒரு ஃபீலிங் வந்துடும்.
எல்லா திறமைசாலியையும் தாண்டிப் போகணும். அதான் நம்ம பிளான். இப்போதைக்கு என்னோட எதிரி ‘போஸ் பாண்டி’. அதாங்க, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துல என்னோட கேரக்டர்.
இப்போதைக்கு ‘போஸ் பாண்டி’ங்கற எதிரியை அடுத்த படத்துல நான் ஜெயிக்கணும்,” என்கிறார்.
இப்ப புரியுதா ‘எனக்கு நானே எதிரி’-ன்னா என்னன்னு…