தெலுங்கில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் சமந்தாவின் தற்போதைய சம்பளம் 2 கோடி என தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
பிரபல தயாரிப்பாளரான பெல்லம்கொண்டா சீனிவாஸ் மகன் சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘அல்லுடு சீனு’ படத்தில் நடித்தற்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. அவர் புதுமுகம் என்பதால் சமந்தா அவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கினார் என்றார்கள்.
ஆனால், சமந்தா இதை மறுத்துள்ளார். “நீங்கள் எழுதுவதைப் போல் தயாரிப்பாளர்கள் எனக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தால் மகிழ்ச்சிதான். ‘அல்லுடு சீனு’ படத்திற்காக சம்பளத்தை உயர்த்தவும் இல்லை, கூடுதலாக வாங்கவும் இல்லை. தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் எனது அக்கறையில் பங்கெடுத்துக் கொள்பவர், பணத்தை விட அவருடைய பங்களிப்பு சிறப்பானது,” என்று தெரிவித்துள்ளார்.