‘கத்தி’ படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளின் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ் அமைப்புகளுடனும், தயாரிப்பு நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.
தொடர்ந்து நடந்து முடிந்த பேச்சு வார்த்தையை அடுத்து பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு ஏற்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ‘கத்தி’ திரைப்படம் தீபாவளி அன்று தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
படத்திற்கான முன் பதிவு நாளை முதல் ஆரம்பமாக உள்ளது.