டிசம்பர் 4ம் தேதி ‘ரஜினி முருகன், ஈட்டி, உறுமீன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.
வரலாறு காணாத மழை பெய்ததன் விளைவாக ‘உறுமீன்’ படத்தைத் தவிர மற்ற படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டன.
போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாத நிலையில், ‘உறுமீன்’ படமும் வித்தியாசமான படமாக இருந்த நிலையில் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் பாபிசிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.