மீண்டும் நடிக்க வந்த நெப்போலியன்

1991ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என பல கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பில் முத்திரை பதித்தவர் நடிகர் நெப்போலியன்.

நடிகர், சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெப்போலியன் சில காலம் தீவர அரசியலில் ஈடுபட்டிருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’, சசிகுமார் தயாரித்து நடிக்கும் ‘கிடாரி’, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் ‘முத்துராமலிங்கம்’ மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராய் பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ஜெயபிரதாவுடன் ‘சரபா’ (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

புதுப் பொலிவுடன் தனக்கேயுரிய அதே கம்பீரத்துடனுடம், உத்வேகத்துடனும் தற்போ நடித்து வரும் நடிகர் நெப்போலியனுக்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.

Read Previous

மீண்டும் ‘மிருதன்’ கூட்டணி

Read Next

Kabali – Ulagam Oruvanukka Song with Lyrics

Most Popular