இயக்குநர் கிஷோர் எம். ராமலிங்கம் படத்தின் கதை குறித்து பகிர்ந்து கொண்டார்:
விஜயலட்சுமி தனது கருத்துகளை திட்டவட்டமாக வெளிப்படுத்தினாலும், முனிஷ்காந்த் அதைப் பெரிதுபடுத்தாமல், மனதுக்குள் புழுங்கி அமைதியாக குடும்பத்தை நடத்திச் செல்கிறார். இப்படி சாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கும் அவர்கள் வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்படுகிறது – அது அவர்களின் உலகத்தை தலைகீழாக மாற்றுகிறது. இதை ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறேன்.
படத்தின் முதல் அரை மணி நேரம் குடும்பக் கதையாக செல்லும்; பின்னர் யூடியூப் உலகத்தைச் சுற்றிய திருப்பங்களுடன் மாறுகிறது. இந்த குடும்பம் எப்படி சவால்களை எதிர்கொள்கிறது என்பதை எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் விவரித்திருக்கிறேன்.
முனிஷ்காந்தை நாயகனாக நடிக்க வைக்க கேட்டபோது, அவர் தயங்கினார். ‘நான் ஹீரோ இல்லை, இந்த கதைக்கு எப்படி பொருந்துவேன்?’ என்று கேட்டார். ஆனால், இந்த கேரக்டர் குணச்சித்திரம், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து பரிமாணங்களும் கொண்டது என்பதை விளக்கி, சம்மதிக்க வைத்தேன்.
அதேபோல், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் விஜயலட்சுமியிடம் கதை சொன்னபோது, முழு ஸ்கிரிப்டையும் கேட்டு, தனது ரோலின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனே ஒப்புக்கொண்டார்.
படத்தில் ராதாரவி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாகவும், குரோஷி ஆட்டோ டிரைவராகவும் நடிக்கிறார்கள். காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, கோடாங்கி ஆகியோர் வித்தியாசமான வேடங்களில் அசத்துகின்றனர். மாளவிகா அவினாஷ் ஒரு முக்கிய கேரக்டரில் இணைந்துள்ளார்.”
ஒளிப்பதிவை சுதர்சன் கையாண்டுள்ளார், இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் (சந்தோஷ் நாராயணனின் உதவியாளர்) பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். பாடல் வரிகளை மோகன் ராஜா கதிர் மொழி மற்றும் ஏகன் எழுதியுள்ளனர்.
நடிகர் முனிஷ்காந்த் ராமதாஸ் பேசுகையில்,
சில காட்சிகளில் காமெடி சேர்க்கலாம் என்று நான் சொன்னபோதும், இயக்குநர் ‘கதைக்கு இவ்வளவு போதும்’ என்று கட்டுப்படுத்தினார். இது குடும்பத்துடன் ரசிக்கும் படமாக இருக்கும்” என்றார்.
கதாநாயகி விஜயலட்சுமி கூறியது:
தயாரிப்பாளர் கே.வி. துரை:
இந்தப் படம் மிடில் கிளாஸ் குடும்பங்களின் உணர்வுகளைத் தொட்டு, கலகலப்பும் திருப்பங்களும் நிறைந்ததாக உருவாகியுள்ளது – நவம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.