போங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதற்கு முந்தைய இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தனது தரத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டியாளரான சரவணன் வெளியேற்றப்பட்டார். அவர் கல்லூரியில் படித்த போது பேருந்தில் உரசுவதற்காகச் சென்றுள்ளேன் என்று சொன்னதை பெண்களுக்கு அவமரியாதை எனக் கருதி அவரை வெளியேற்றியதாகச் சொன்னார் பிக் பாஸ்.

ஆனால், கமல்ஹாசன் அது குறித்து எதுவுமே சொல்லாமல் சரவணன் வெளியேற்றப்பட்டதை சர்வ சாதாரணமாகக் கடந்து போனார்.

கவின், சாண்டி ஆகியோர் ஒவ்வொரு நாளும் பெண் போட்டியாளர்களை அவமரியாதை செய்தும், கிண்டலடித்தும் வருகிறார்கள். அவர்கள் மீது இதுவரை பிக் பாஸ் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கமல்ஹாசனும் கவின் பேசுவதை காமெடியாக எடுத்துக் கொண்டு அவருக்கு மேலும் ஊக்கம் கொடுக்கிறார்.

கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் பரவின. கை மணிக்கட்டில் கட்டு போட்ட நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்று நிகழ்ச்சியில் காட்டாமலேயே அவர் விதிகளுக்கு மீறி செயல்பட்டதாகவும் அதனால் அவரை வெளியேற்றுவதாகவும் அறிவித்தார் பிக் பாஸ். கமல்ஹாசனும் அது குறித்து எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

மதுமிதாவுக்கு நடந்த ‘கொடுமை’ யாரால், எதனால் நடந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. எப்போதோ பேசியது இப்போது தவறாகத் தெரிந்து சரவணனை வெளியேற்றினார்கள். ஆனால், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமானவர்களை நிகழ்ச்சியை விட்டு உடனடியாக வெளியேற்றாமல் அதை மூடி மறைக்கிறார்கள்.

அடுத்து, கடந்த வாரம் விருந்தாளியாக வருகிறார் வனிதா என்றார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் ‘வைல்டு கார்டு என்ட்ரி’ மூலம் வந்திருக்கிறார் வனிதா, அதனால் அவரை இந்த வாரம் நாமினேட் செய்ய முடியாது என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். இதை கடந்த வாரம் அவர் வரும் போதே வைல்டு கார்டு மூலம் மீண்டும் வருகிறார் வனிதா என்று சொல்லியிருக்கலாமே.

மேலும், இந்த நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது நபராக மக்களால் வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர் வனிதா. அவரை மீண்டும் வைல்டு கார்டு மூலம் வரவழைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் ?.

ஆக, இந்த மூன்றாவது சீசனில் பிக் பாஸ் நிறையவே ‘போங்கு ஆட்டம்’ ஆடுகிறார்.

Read Previous

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

Read Next

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

Most Popular