இந்தியத் திரையுலகில் இன்றும் கனவுக்கன்னியாக இருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த படமும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
தொடர்ந்து பல கதைகளை கேட்டு வந்தாலும் அவரை எந்த கதையும் ஈர்க்காத நிலையில், தற்போது தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கோனா வெங்கட் சொன்ன கதை அவரை மிகவும் கவர்ந்து விட்டதாம்.
இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க சம்மத் தெரிவித்துள்ளாராம்.
படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்கிறார் கோனா வெங்கட்.