ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் நா.முத்துக்குமார் வரிகளில், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி தேசிய விருதை வென்ற ‘தங்க மீன்கள்’ படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடல் வரிகள்…
பல்லவி
ஆனந்த யாழை மீட்டுகிறாய் !
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்! – அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
சரணம் – 1
தூரத்து மரங்கள் பார்க்குதடி !
தேவதை இவளா? கேட்குதடி !
தன்னிலை மறந்தே பூக்குதடி!
காற்றினில் வாசம் தூக்குதடி!
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி!
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி !
சரணம் – 2
உன் முகம் பார்த்தால் தோன்றுதடி !
வானத்து நிலவு சின்னதடி!
மேகத்தில் ஒளிந்தே பார்க்குதடி!
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி!
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டிற்கு அனுப்பு நல்லபடி!
இந்த மண்ணில் இது போல் யாரும் இங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!
இப்பாடலின் வீடியோ….
http://youtu.be/fyGBPwF-2xM
