கதை
ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை உள்ளவர் ஹரிஷ் கல்யாண். ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியடைந்தவருக்கு டிகங்கனா சூர்யவன்ஷி மீது காதல் வருகிறது. ஆனால், டிகங்கனா மார்ஸ் கிரகத்திற்குச் செல்லும் ஆசையில் இருப்பவர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
இந்தக் கதை மீதும், தன் கதாபாத்திரம் மீதும் எப்படி நம்பிக்கை வைத்து இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை. கொஞ்சம் நகைச்சுவை கலந்த கதாபாத்திரம். ஆனால், அவருக்கு அந்த நடிப்பே வரவில்லை. காதலில் மட்டும் கொஞ்சம் ஜொலிக்கிறார்.
நாயகி டிகங்கனா மிக அழகாக இருக்கிறார், சிரிக்கிறார், கொஞ்சம் நடிக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். நல்ல படங்களைத் தேர்வு செய்தால் தமிழ் சினிமாவில் தனி இடத்தைப் பிடிக்கலாம். இந்தப் படத்தில் இவருக்குத்தான் ராசி வேலை செய்யும் போலிருக்கிறது.
யோகி பாபு, ஒரு நடிகராகவே வந்து படத்தைத் தொகுத்து வழங்குகிறார். இவருக்கும், படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ரெபா மோனிக்கா ஜான், ரேணுகா, முனிஷ்காந்த் கொடுக்கப்பட்ட வேடத்தில் நடித்துக் கொடுத்துள்ளார்கள்.
இசை, மற்றவை
ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஒன்று கூட தேறவில்லை. மற்றவர்களின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
+
நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி
–
மற்றவை எல்லாம்…