‘ஆறாம் திணை’ – பேயும் பேய் சார்ந்த இடமும்…

MRKVS சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’.

அருண்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் அருண் கூறியதாவது,

“மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என இலக்கியங்களில் ஐந்திணைகள் பற்றி சொல்லப்படுவது உண்டு. ஆனால் ‘பேயும் பேய் சார்ந்த இடமும்’ ஆக இந்த ‘ஆறாம் திணை’ உருவாகியுள்ளது.

பொதுவாக பேய்ப் படங்களில் பேய்களுக்கென இடம் பெறும் பிளாஷ்பேக் தான் முக்கியமான அம்சமாக இருககும். ஆனால் அந்த மரபை உடைத்து, ஒவ்வொரு காரியங்களுக்கான காரணங்களையும் படம் பார்க்கும் பார்வையாளர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளும் விதமாக புதிய பாணியில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்படுள்ளதாம். இது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்.

எப்போதும் பாசிடிவ்வான எண்ணங்கள் தான் நல்ல விளைவுகளைக் கொடுக்கும் என்கிற கருத்தை முன்னிறுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பேயை தாறுமாறாக விரட்டி விரட்டி காதலிக்கும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரம் புதியதாகவும் கலகலப்புக்கு உத்தரவாதம் தருவதாகவும் இருக்கும். அதுமட்டுமல்ல நடிகர் ரவிமரியாவுக்கும் இது பேர்சொல்லும் படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர் அருண் .சி.

மொட்ட ராஜேந்திரனுடன் விஜய் டிவி கலக்கப்போவது யாரு டைட்டில் வின்னர் குரேஷியும் காமெடியில் கலக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு ராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் கே.சோழன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு – திருமலை.

கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதியில் கடும் மழையில் கூட இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள். இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது.

Read Previous

கலகலப்பு 2 – டீசர்

Read Next

யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் ‘கலகலப்பு 2’

Most Popular