ஹாலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குனர்களுர் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்.
திரைப்பட பாரம்பரி பவுண்டேஷன் என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார்.
இன்டர்ஸ்டெல்லர், டன்க்ரிக், இன்செப்ஷன், தி டார்க் நைட் டிரைலாஜி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நோலன்.
டிஜிட்டல் யுகத்தில் திரைப்டங்களின் முக்கியத்துவம் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். அவருடன் விஷுவல் கலைரான டாசிடா டீன் என்பவரும் வந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் டாசிடா டீன் ஒரு விரிவுரையை வழங்கினார். அடுத்து ‘டன்க்ரிக்’ படம் 70 எம்எம் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது. இன்று ‘இன்டர்ஸ்டெல்லர்’ படம் 35 எம்எம் நுட்பத்தில் திரையிடப்பட உள்ளது.
இந்தியத் திரையுலகத்தில் புதிய தொழில்நுட்பங்களை முந்தித் தரும் கமல்ஹாசன், கிறிஸ்டோபர் நோலனை நேற்று சந்தித்துப் பேசினார். அது பற்றி கமல்ஹாசன் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது,
“கிறிஸ்டோபர் நோனை சந்தித்தேன். ‘டன்க்ரிக்’ படத்தை டிஜிட்டல் முறையில் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டேன். அதற்கு பதிலாக அவருக்கு ‘ஹே ராம்’ படத்தின் டிஜிட்டல் பிரதியைக் கொடுக்கிறேன். அவர் ‘பாபநாசம்’ படத்தைப் பார்த்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது,” என்று கமல் பதிவிட்டுள்ளார்.
மேலும், புகைப்படங்களுக்கு…
Delighted to welcome #TacitaDean, #ChristopherNolan & @shividungarpur to the Museum for a talk this evening on how #celluloid #film can be presented in spaces like #museums. #Mumbai pic.twitter.com/OwD5lMpdFy
— Dr. Bhau Daji Lad Museum (@BDLMuseum) March 30, 2018