கௌதம் மேனன் தற்போது ஜீவா, சமந்தா நடிக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தை இயக்கி வருகிறார். கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதற்கடுத்து அவர் சூர்யா நடிக்க ‘துப்பறியும் ஆனந்த்’ என்ற படத்தை இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். இப் படம் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்திற்குப் பிறகு ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.
அதே சமயம், கௌதம் மேனன் மீண்டும் சிம்புவுடன் இணைந்து ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கப் போவதாக கோடம்பாக்கத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.