தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் அனுஷ்கா.
தற்போது தமிழில் கார்த்தியுடன் இவர் நடித்து வரும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது.
சூர்யாவுடன் ‘சிங்கம் 2’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ்ஸுடன் ‘மிர்ச்சி’ என்ற படத்தி நடித்து வருகிறார்.
‘ராணி ருத்ரமாதேவி’ என்ற சரித்திரப் படத்தில் நாயகியாகவும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்காக வாள் வீச்சு, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளை அனுஷ்கா தற்போது பெற்று வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆரம்பமாக இருக்கிறது.