‘ஆட்டோகிராப்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் கோபிகா. தொடர்ந்து ‘எம்மகன், வெள்ளித் திரை’ போன்ற படங்களில் நடித்து பிஸியாக இருக்கும் போதே டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அயர்லாந்தில் செட்டிலானார்.
தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆனால் , தமிழில் அல்ல மலையாளத்தில்.
திருமணமான நடிகையாக இருந்தாலும் அவர்களை கதாநாயகியாகப் பார்க்கும் மலையாளத் திரையுலகத்தில் ஜெயராம் ஜோடியாக ‘பார்யா அத்ர போரா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.