பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘மரியான்’. பூ பார்வதி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரி பகுதியில் கடலுக்குள் நடைபெற்ற போது, தனுஷ் அமர்ந்திருந்த படகு கவிழ்ந்து தண்ணீரில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக செய்தி பரவியது.
ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, அது வெறும் வதந்திதான் , கடல் எங்களை பத்திரமாக பார்த்துக் கொண்டது, என தனுஷ் தெரிவித்துள்ளார்.