ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்தும் மாணவர்கள் அமைதிக்குத் திரும்ப வேண்டுமென்றும் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கை…
“அறப் போராட்டத்தின் வெற்றிதான் அவசரச் சட்டம்.
அந்தச் சட்டமே நிரந்தரமாகலாம், அல்லது நிரந்தரமாக்கலாம். அறவழி வெற்றியை அறவழியில் கொண்டாடுவதே சாலச்சிறந்தது. அடக்குமுறை – வன்முறை இரண்டும் எவருக்கும் ஏற்றதல்ல. காவல்துறை நண்பர்களே! அமைதிக்கு உதவுங்கள். அறப்போர் வீரர்களே! அமைதிக்குத் திரும்புங்கள்,” என அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.