விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு நிகழ்ச்சி மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை.
சினிமா, டிவியில் உள்ள பிரபலமான சில ஜோடிகளான மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகிய ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டியாளர்களாக மணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, திரவியம் – ரித்து, மற்றும் செந்தில் – ராஜலட்சுமி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இறுதிப் போட்டியில் உள்ள இரண்டு சுற்றுகளில் இந்த ஜோடிகள் அவர்களது திறமையை வெளிப்படுத்த உள்ளார்கள். நாளை மே 19, ஞாயிறு மதியம் 3 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
நடிகைகள் விஜயலலட்சுமி, தேவதர்ஷினி, தொகுப்பாளர் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த இறுதிச்சுற்றில் நடிகை விஜயலலட்சுமி மற்றும் கோபி வெற்றியாளர்களை அறிவித்து முடிசூட்ட உள்ளனர்.
இறுதிப் போட்டியில் விஜய் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.