கிஷோர் நடிக்கும் ‘மெல்லிசை’

‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எப்டிஎப்எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக ‘மெல்லிசை’ படம் உருவாகி வருகிறது.

திரவ் எழுதி இயக்கியுள்ள இந்தப் கிஷோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர்.

அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. இப்படத்தில் உடற்கல்வி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கிஷோர். 

படம் பற்றி கிஷோர் கூறுகையில்,

“நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

Read Previous

குறைந்த நாளில், குறைந்த பட்ஜெட்டில் உருவான சரித்திரப் படம் ‘திரௌபதி 2’

Read Next

‘பராசக்தி’ இசை வெளியீட்டு விழா

Most Popular