சுந்தர் சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை’, 2016ம் ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 2’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.
அந்த வரிசையில் தற்போது ‘அரண்மனை 3’ பாகத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு, சம்பத் குமார், நந்தினி, விச்சு, மனோபாலா, சாக்சி அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் அருகில் உள்ள வான்கெனர் அரண்மனையில் நடந்து வருகிறது. அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.
சத்யா இசையமைக்க, யுகே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
முதல் இரண்டு பாகங்களுக்கும் அரண்மனையை அரங்கமாக அமைத்தார்கள். இந்த முறை நிஜமான பிரம்மாண்டமான அழகான அரண்மனையில் படமாக்கு