ஆந்திர அரசுக்கும், வாழ்த்திய கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்த் நன்றி

ஆந்திர மாநில அரசின், 2014ம் ஆண்டிற்கான என்டிஆர் தேசிய விருது கமல்ஹாசனுக்கும், 2016ம் ஆண்டிற்கான விருது ரஜினிகாந்துக்கும் இன்று அறிவிக்கப்பட்டது.

அதற்காக ஆந்திர மாநில அரசுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்துக்கும் தன்னுடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்தார்.

சற்று முன்னர், ரஜினிகாந்த், ஆந்திர மாநில அரசுக்கும், தனக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் ஆந்திர மாநில அரசின் என்டிஆர் தேசிய விருதைப் பெற்றுள்ளதற்கு அவர்களது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Read Previous

என்டிஆர் தேசிய விருது, ரஜினிகாந்த்துக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Read Next

விஜய் ஆன்டனியும் சூப்பர் ஸ்டார் ஆவார் – சரத்குமார் வாழ்த்து