டோவினோ தாமஸ், சேரன் நடிக்கும் ‘நரி வேட்டை’, மே 23 ரிலீஸ்

டோவினோ தாமஸின் தலைப்பு நடிப்பில் உருவாகியுள்ள “நரிவேட்டை” திரைப்படம் 2025 மே 23ம் தேதி தமிழ் மற்றும் மலையாளம் இருமொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அனுராஜ் மனோகரின் இயக்கத்தில் வரும் இந்த படத்திற்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அபின் ஜோசப் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் வரும் இந்த படம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக வெளியிடப்படும்.  

டோவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சராமூடு, பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் போன்ற திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் முதல் முறையாக நடிக்கும் இயக்குனர் சேரனும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றுகிறார்.  

இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷா மற்றும் ஷியாஸ் ஹாசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 132 நிமிடங்கள் நீளமுள்ள இந்த திரைப்படம் கச்சிதமான எடிட்டிங், கவர்ச்சிகரமான ஒளிப்பதிவு மற்றும் ஜேக்ஸ் பிஜோயின் அதிரடி பின்னணி இசையுடன் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புது அனுபவத்தை வழங்கலாம்.

Read Previous

ராம் இயக்கியுள்ள ‘பறந்து போ’, ஜுலை 4 ரிலீஸ்

Read Next

மெட்ராஸ் மேட்னி – முதல் பார்வை வெளியீடு

Most Popular