பளுதூக்கும் போட்டியில் உலக அளவில் சாதனைகள் புரிந்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் இந்தியாவைச் சேர்ந்த கர்ணம் மல்லேஸ்வரி.
அவருடைய வாழ்க்கை வரலாறு முழுமையான இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது.
சத்யநாராயணா, கோனா வெங்கட் இருவரும் தயாரிக்க, கோனா வெங்கட் கதை, திரைக்கதை எழுதுகிறார்.
சஞ்சனா ரெட்டி இயக்கும் இப்படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.