பி.ஜி. சுரேந்திரன் கதை திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படத்திற்கு ‘கோலாகலம்’என்றுபெயரிட்டுள்ளார்
இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த் என்ற வில்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கும் பி.ஜி.சுரேந்திரனிடம் படம் பற்றி கேட்டோம்…
கோலாகலம் படத்திற்காக அமல் நடிக்க ….
“என் மைண்ட டிஸ்டர்ப் பண்ணாதே !
படிக்கனும், சம்பாதிக்கணும்
உழைக்கணும் – வீடு வாங்கணும்
கார் வாங்கணும்,கல்யாணம் பண்ணனும்
புள்ள பெக்கணும் அதனால
என் மைன்ட் டிஸ்டர்ப் பண்ணாதே” – என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த பாடல் இளைய தலைமுறை மாணவர்களின் மன உனர்வுகளை பிரதிபலிப்பது மாதிரி உருவாக்கப் பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளரும் , இயக்குனருமான பி.ஜி.சுரேந்திரன்
‘கோலாகலம்’ தீபாவளி திருநாளில் திரைக்கு வருகிறது