ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் சார்பில் ராகவேந்திரா தயாரிக்க, அறிவழகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருண் விஜய், ரெஜினா, அறிமுக நாயகி ஸ்டெபி பட்டேல், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.
‘குற்றம் 23’ படத்திற்குப் பிறகு அறிவழகன், அருண் விஜய் இணைந்துள்ள இந்தப் படம் ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம்.
சென்னை, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.