தியேட்டர்களில் வெளியாகும் ‘டாக்டர்’
13 Sep 2021
கேஜேஆர் ஸ்டுடியோஸ், எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘டாக்டர்’.
இப்படத்தை அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அது பற்றி தயாரிப்பாளர் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாவது,
“டாக்டர்” திரைப்படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்தத் திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். தமிழில் புதுமையான, இது போன்ற ஒரு ப்ளாக் காமெடி திரைப்படம், திரையரங்கில் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது.
‘டாக்டர்’ திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். அப்போதும் ‘டாக்டர்’ திரைப்படத்தை பெரிய திரைக்குக் கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது.
எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில்துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் வெளியீட்டுக்காக காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது. இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில் ‘டாக்டர்’ திரைப்படத்தை தியேட்டர்களில் கொண்டு வருகிறோம்.
இத்திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தை புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் ‘டாக்டர்’ திரைப்படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.
எஸ்கே புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலை அரசு கூறியதாவது,
“எங்களின் ‘டாக்டர்’ படம் தியேட்டர்களில் வெளியாவது, குழுவில் உள்ள அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. KJR Studios தயாரிப்பில் கோட்டபாடி J ராஜேஷ் அவர்களின் துல்லியமான திட்டமிடல் மற்றும் தியேட்டர் வெளியீட்டில் உறுதியாக அவர் இருந்ததற்கு நன்றி.
ஒரு தொற்றுநோய் பரவிய கடினமான காலங்களில், நாடு முழுவதும் உள்ள மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் கூட சமரசம் செய்து, OTT வெளியீட்டில் படத்தை வெளியிட அணுகிய போதும், அவர் திரையரங்குகளில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இத்திரைப்படம் இருக்கும் என்று இந்த திரைப்படத்தின் மீது நம்பிக்கை வைத்தார்.
சிவகார்த்திகேயன்-இயக்குநர் நெல்சன் திலீப்குமார்-அனிருத் ஆகிய மூவரின் கூட்டணி ரசிகர்களுக்கு 100% சிறப்பான பொழுதுபோக்கு சினிமா அனுபவத்தை தந்து, அரங்குகளை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி.
எஸ்கே புரொடக்ஷன்ஸ், ‘டாக்டர்’ வெளியீட்டின் நன்நாளுக்காகக் காத்திருக்கிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் 'டாக்டர்' பார்க்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை அனுபவிக்க, நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.
Tags: doctor, sivakarthikeyan, nelson dilipkumar, priyanka arul mohan, anirudh