‘லைகர்‘, அற்புதமான ஆக்ஷன் படம் - விஜய் தேவரகொன்டா

13 Aug 2022

தர்மா புரொடக்ஷன்ஸ், பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘லைகர்’ படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ளது.

ஆகஸ்ட் 25ம் தேதியன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விஜய் தேவரகொன்டா, அனன்யா பாண்டே, வில்லன் நடிகர் விஷால் மற்றும் படத்தைத் தமிழில் வெளியிடும் ஆர்கே சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் ஆர்கே சுரேஷ் பேசுகையில்,
 
விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரும் மகிழ்ச்சி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய வெற்றியைப் பெறும். இனி, விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப் படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள், நன்றி. 

நாயகி அனன்யா பாண்டே பேசுகையில்,

நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை  தமிழில் பேச கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப் படம் மிகப் பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தைத் தந்தது. இப்படத்தைப் பார்த்து ரசியுங்கள், அனைவருக்கும் நன்றி. 

நடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,

தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. நோட்டா படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப் படம் ஒரு அற்புதமான ஆக்ஷன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்ஷன் ரசிகர்களையும் கவரும் விதத்தில் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ்ப் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன். வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். லைகர் படத்தைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தைத் தரும், நன்றி. 

Tags: liger, poori jagannath, vijay devarakonda, ananya pandey

Share via: