'வேள்பாரி' நாவலை படமாக்க ஷங்கர் திட்டம்

11 Jul 2024

‘வேள்பாரி’ நாவலை படமாக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. நாளை (ஜூலை 12) வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

'இந்தியன் 2' படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில், அடுத்ததாக வரலாற்று கதை, ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான கதை, சயின்ஸ் பிக்சஸ் கதை ஆகியவை தயாராக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். ஆனால், அடுத்து எதை இயக்குகிறேன் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றூ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்னொரு பேட்டியில் இயக்குநர் ஷங்கர் “கொரோனா காலத்தில் சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ கதையினை படித்தேன். அது மிகவும் பிடித்திருந்ததால் உடனே திரைக்கதை வடிவம் எழுதிவிட்டேன். இதனை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். ஆனால், அதில் நடிகர் யார் என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ‘வேள்பாரி’ கதையினை தான் உரிமையை வாங்கி திரைக்கதை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குநர் ஷங்கர் என்பது தெளிவாகியுள்ளது. 

Tags: velpari, shankar

Share via: