ரசிகர்களுக்கு கருணாகரன் நன்றி...
12 May 2015
‘கலகலப்பு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான கருணாகரன் நடிக்க வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடிக்க உள்ளார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமான அனைவருக்கும் கருணாகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
“எனது முதல் படமான ‘கலகலப்பு’ வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
திரு.கார்த்திக் சுப்புராஜ் மற்றும் திரு.நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர். எனக்கும் ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார நான் நன்றி தெரிவிக்கிறேன்.
‘லிங்கா’ படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த திரு.கே.எஸ். ரவிகுமார் அவர்களுக்கும், திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எதிர்பாராத மகிழ்ச்சியான வாய்ப்பு. இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த இருபது படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி.
படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்,” என கருணாகரன் தெவித்துள்ளார்.

