அமீர் நாயகனாக நடிக்கும் ‘நாற்காலி’ படப்பிடிப்பு நிறைவு

12 Jan 2021

மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன் நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

'யோகி, படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் அமீர்,  'வடசென்னை' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படத்திற்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் இது.

'முகவரி', 'காதல் சடு குடு', 'தொட்டி ஜெயா' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை  'இருட்டு' திரைப்படத்திற்குப் பிறகு இந்த 'நாற்காலி'யை இயக்கியுள்ளார்.

வித்யாசாகர் இசையமைக்க, ஒளிப்பதிவை இ.கிருஷ்ணசாமி, படத்தொகுப்பை ஆர்.சுதர்சன், பாடல் பா விஜய், வசனம் அஜயன் பாலா - க.முரளி, கலை இயக்கத்தை ஏ.கே.முத்து, சண்டைக்காட்சிகளை டான் அசோக், நிழற்படப்பதிவை மோதிலால், விளம்பர வடிவமைப்பை ராஜா – வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே  செல்வா  ஆகியோர் செய்துள்ளனர்.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக இந்த  திரைப்படத்திற்காக "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு.." என்ற பாடலை பாடியிருக்கிறார்.

மிகுந்த பொருட் செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது. 

வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

Tags: naarkali, vz durai, ameer, chandini sridharan, vidyasagar

Share via: