யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘சல்பர்’ ஆரம்பம்

08 Mar 2021

முகேஷ் பிலிம்ஸ் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ‘சல்பர்’.

இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார்.

யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி. அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த க்ரைம் டிபார்ட்டிமென்ட்டில் இருந்து காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார்.

தன் திறமைக்கு அங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது. 

எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த கால், தவறான ஒரு கால் என பாரதி நினைக்க, பின்பு தான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது. பின்னர் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை ஆக்‌ஷன், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்துள்ளார்களாம். 

இன்று பூஜையுடன் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.

Tags: siddharth vipin, yaashika anand, buvan

Share via: