‘நாற்காலி’ படத்தின் ‘எம்ஜிஆர்’ பாடலை வெளியிடும் தமிழக முதல்வர்
14 Jan 2021
மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா தயாரிப்பில், வி.இசட்.துரை இயக்கத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன் நாயகன், நாயகியாக நடிக்க இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் புகழ் பாடும் பாடல் ஒன்றை இப்படத்திற்காக மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். வித்யாசாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“நெஞ்சமுண்டு நேர்மையுண்டு...” எனத் தொடங்கும் அப்பாடலை எம்.ஜி.ஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 16-ம் தேதி மாலை தமிழக முதல்வர்
எடப்பாடி பழனிசாமி வெளியிட அமைச்சர் கடம்பூர் ராஜூ பெற்றுக் கொள்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது முழுவேகத்துடன் நடந்து வருகிறது.
‘நாற்காலி’ படத்தை வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
Tags: ameer, naarkali, vz durai, chandini sridharan, vidyasagar