ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அமலா பால்
07 Mar 2021
நடிகை அமலா பால் நடித்து சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பிட்ட கதலு’ என்ற படம் வெளிவந்தது. அதற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடத்தும் “What’s Next India 2021” எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கும் பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால்.
இந்த நிகழ்வில் இந்திய அளவில் பெரும் பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, கரண் ஜோகர், விக்ரமாதித்யா மோத்வானி, விவேக் கோம்பர் ஆகியோர் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நடிகை அமலா பால் கூறியதாவது,
“இந்தியத் திரை உலகின் மிகப்பெரும் ஆளுமைகளுடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பது மிகப் பெரும் உற்சாகத்தையும் மகிழ்வையும் தந்துள்ளது.
தென்னிந்திய திரையுலகின் அடையாளமாக, Netflix டிஜிட்டல் திரையின் அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்ள உள்ளது மிகப்பெரும் கௌரவம். இந்நேரத்தில் மிக முக்கிய படைப்பாக அனைவராலும் பாராட்டப்படும் Netflix நிறுவனத்தின் “பிட்ட கதலு” படத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஒவ்வொரு திரைப்படத்திலும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தி வரும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்கிறார்.
Tags: amala paul, pittakathalu, netflix