மறக்க முடியாத 'இந்தியா - பாகிஸ்தான்' - சுஷ்மா ராஜ்

Release Date:07 May 2015
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி , மனோபாலா, ஜெகன், M.S. பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’. தெலுங்கில் மாயா படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் அனுஷ்கா போலவே இருப்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். தமிழில் ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம் அறிமுகமாகும் சுஷ்மா தன்னுடைய முதல் தமிழ்ப் பட அனுபவத்தை பற்றி கூறியதாவது, “இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தேன். அப்படங்களை பார்த்து இப்படத்தில் எனக்கு வாய்பபளித்தனர். இந்தப் படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாபாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே நடித்து முடித்தேன். “தமிழ் எனக்கு அதிகம் பரிச்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் போது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஒரு நீதிமன்றக் காட்சியில் சுத்தத் தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பலகோடி பெண்களில்...’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல்காட்சியை வெகுவாக பாராட்டினர். எல்லோரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வதை மிகவும் நல்ல விஷயமாகாவே பார்க்கிறேன். நாய்கள் என்றாலே எனக்கு பயம், படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் ஓட்டும் காட்சி படமாக்கிய போது நாய் என் மீது தாவி என்னைக் கடித்ததில் நான் கீழே விழுந்துவிட்டேன். அந்த சம்பவம் இப்படத்தில் நடித்ததை என்னால் மறக்கவே முடியாத அளவிற்கு அமைந்துவிட்டது. மனோபாலா, M.S. பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது. அவர்களிடம் ஸ்பாட்டிலேயே எப்படி நடிப்பது என்று கற்றுக்கொண்டேன். விஜய் ஆண்டனி சார் யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்,” என அட்டகாசமான அறிமுகப் படத்திற்காகக் காத்திருக்கிறார் சுஷ்மா ராஜ்.

Share via: