செம குஷியில் சுந்தர்.சி: பின்னணி என்ன?

13 Jun 2024

பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் நச்சரிப்பால் செம குஷியில் இருக்கிறார் சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அரண்மனை 4’. உலகமெங்கும் வெளியாகி மொத்த வசூலில் 100 கோடியை கடந்து பெரும் சாதனை புரிந்தது. இதனால் சுந்தர்.சியின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இதனிடையே, முன்பே தயார் செய்து வைத்திருந்த ‘கலகலப்பு 3’ படத்தினை தனது தயாரிப்பிலேயே தொடங்க திட்டமிட்டார் சுந்தர்.சி. இதற்கான பணிகளையும் துவங்கினார். ஆனால் ஸ்கிரீன் சீன் நிறுவனம் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

அந்நிறுவனம் தயாரிப்பில் தமன்னா நடிக்க புதிய படமொன்று துவங்குவதாக இருந்தது. அறிமுக இயக்குநர் இயக்குவதாக இருந்த அந்தப் படத்துக்கு சுந்தர்.சியை இயக்குநராக்கிவிட்டார்கள். அதுவும் பேய் படம் என்பதால், ‘அரண்மனை 4’ கூட்டணி மீண்டும் இணைகிறது என்று அறிவித்து வியாபாரம் செய்ய திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்தப் படம் மட்டுமன்றி சில தயாரிப்பாளர்கள், தங்களுடைய நிறுவனத்துக்கு படம் இயக்கி தருமாறு அணுகியிருக்கிறார்கள். மீண்டும் தனது பக்கம் அதிர்ஷ்ட காற்று அடிக்கத் தொடங்கியிருப்பதால் செம குஷியில் இருக்கிறார் சுந்தர்.சி.

தன்னிடம் உதவியாளர்களாக பணிபுரிந்த பலரிடம் தயாராக இருக்கும் கதை இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அந்தக் கதைக்கு நல்ல பணம் கொடுத்து வாங்கி, அதனை தான் இயக்கி பணம் சம்பாதித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.

Tags: sundar c

Share via: