பிரபாஸ் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டப் படம் ‘சலார்’

02 Dec 2020

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். 

வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. 

தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘சலார்’ படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படத்தை இயக்கியபிரஷாந்த் நீல் இயக்குகிறார். 

தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். 

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் "பிரபாஸ் மற்றும் பிரஷாந்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில் இணைப்பதில் மிகுந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஹொம்பாளே பிலிம்ஸ் முதல் படத்தில் இருந்தே சினிமாத் துறையில் புதிய ட்ரெண்ட்டை உருவாக்கி வருகிறது. 'சலார்" படத்தை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக உருவாக்க எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளை மேற்கொள்வோம்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் புதிய சாதனையையும் ஹொம்பாளே பிலிம்ஸ் நிகழ்த்தியுள்ளது. இதுவரை இந்தியத் திரையுலகில் எந்தவொரு தயாரிப்பு நிறுவனமும், 2 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் அவர்களது படங்களை வெளியிட்டதில்லை. 

'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் - பிரஷாந்த் நீல் இணையும் ‘சலார்’ படத்தையும் அப்படியே வெளியிடுகிறது.

Tags: salaar, prabhas, prashanth neel

Share via: