உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் த்ரில்லர் படம் ‘கண்ணை நம்பாதே’

18 Feb 2023

அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மாறன் அடுத்து இயக்கியுள்ள படம் ‘கண்ணை நம்பாதே’.

உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா, பூமிகா, வசுந்தரா, சதீஷ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் மாறன் கூறுகையில்,

“இது ஒரு க்ரைம் த்ரில்லர் இப்படம். ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் அப்பாவி இளைஞர், அதிலிருந்து மீண்டு இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. நான் கேள்விப்பட்ட சம்பவங்கள், பத்திரிகைகளில் படித்த செய்திகள் போன்றவற்றை வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறேன், அதற்காக இது உண்மை சம்பவம் அல்ல, நமக்கு தெரிந்த குற்ற சம்பவங்களை வைத்து ஒரு கற்பனையான க்ரைம் திரில்லர் கதையை எழுதியிருக்கிறேன்.

உதயநிதி சாரிடம் முதலில் ஒரு காதல் கதையைத்தான் சொன்னேன். அவர் காதல் கதை வேண்டாம் என்றார், பின்னர் இந்த க்ரைம் கதையைச் சொன்னேன், அவருக்குப் பிடித்து இதில் நடிக்க சம்மதித்தார். படத்தில் கிராபிக்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவராக அவர் நடித்துள்ளார்.

கதைக்குப் பொருத்தமான தலைப்பாக இருந்ததால் ‘கண்ணை நம்பாதே’ என்று தலைப்பு வைத்தோம். அது படத்திற்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பது படம் பார்க்கும் போது அனைவருக்கம் புரியும். 

ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா என 10 முக்கிய நட்சத்திரங்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள்.அவர்கள் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறோம். படத்தின் எண்பது சதவீதக் கதை இரவில் தான் நடக்கும். இரண்டாம் பாதி முழுவதும் ஒரே இரவில் நடக்கும். மார்ச் மாதம் இப்படம் வெளியாக உள்ளது,” என்றார்.

ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

Tags: kannai nambathe, maaran, udhayanidhi stalin, aathmika, prasanna, srikkanth

Share via: