பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘அரண்மனை 3’

11 Oct 2021

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வழங்க, பென்ஸ் மீடியா அருண்குமார் வழங்க, அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்க, சுந்தர் சி இயக்கத்தில், ஆர்யா, ராஷி கண்ணா, யோகி பாபு, விவேக், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அரண்மனை 3’.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா பேசுகையில்,

இந்த படத்தில் நடிப்பதற்காக சுந்தர்.சி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்து அவரைச் சென்று சந்தித்தேன். நான் இதுவரை பேய்ப் படங்களைப் பார்த்ததில்லை, பேய்ப் படம் என்றாலே ஒரு மைன்ட் பிளாக் வந்துவீடும. அதனால், இந்தப் படத்தில் எப்படி நடிப்பது என்று கேட்டேன். தலையைக் குனிந்து, கண்ணை வெறித்துப் பார்த்தால் போதும், அது மிகவும் ஈசிதான், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னார். இப்படத்தில் விவேக்  சாருடன் நடித்தது  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் பயணித்த அந்த 40 நாட்கள் மறக்க முடியாதவை. நான் அவரது மிகப் பெரிய ரசிகன். இந்தப் படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தில்   பாடல்கள் மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார் சத்யா. இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் உதயநிதி அவர்களுக்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், திரையரங்குகளில் இப்படம் வெளியாவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகை ராஷி கண்ணா பேசியதாவது, 

இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி, குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த படத்தை வெளியிட்டு சப்போர்ட் செய்யும் உதயநிதி அவர்களுக்கு நன்றி. கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். தியேட்டரில் இப்படத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர் C .சத்யா பேசுகையில்,

இந்தப் படம் எனக்கு 25 வது படம். இந்த படத்திற்கு பின்னணி இசை அமைப்பதில் எனக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது. 20 நாட்களில் முடிக்குமாறு என்னை இயக்குனர் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த லாக்டௌன் எனக்கான நாட்களை அதிகப்படுத்தியது. அதிக நாட்கள் எடுத்துக்கொண்டு படத்திற்கு சிறப்பாக இசை அமைத்துள்ளேன். மற்ற பாகங்களைவிட இந்த மூன்றாம் பாகத்தில் எமோஷனல் சீன்கள் அதிகமாக இருக்கின்றன.

நடிகர் மனோபாலா பேசியதாவது, 

குஜராத்தில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மேலாக தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். மறக்க முடியாத நினைவுகள். காலையில் 7 மணிக்கு சூட்டிங் சென்றுவிட்டு இரவு பத்து மணிக்கு திரும்புவோம் . படப்பிடிப்பு போவதே தெரியாது. இதில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவேக் சாருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை, அவரின் இழப்பு வருத்தத்தை அளிக்கிறது.

இயக்குனர் சுந்தர் சி பேசுகையில்,

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், நீங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுடன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. எல்லோரும் சொல்வார்கள் அரண்மனை படத்தை ஈசியாக எடுத்து விட்டீர்கள் என்று, ஆனால் அது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான படங்களை  மக்கள் விரும்புமாறு கொடுப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ஏற்கனவே உள்ள விஷயங்களை விட கொஞ்சம் வேறுபட்டதாக இருக்க வேண்டும். 

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களுமே நல்ல வசூலையும் வெற்றியையும் பெற்றுத் தந்தது. ஆனால் உடனடியாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடியாது. அதற்கான கதையும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுக்களும் அமைந்தால் மட்டுமே சாத்தியம்.

மற்ற நடிகர்களை போல் இல்லாமல் நடித்து கொடுத்து செல்லாமல் பிசினஸ் ரீதியாக எனக்கு உதவியாக இருந்தார் ஆர்யா. அரண்மனை படம் என்றாலே நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்திலும் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால் எல்லாருக்குமே முக்கிய கதாபாத்திரம் தான்.

அரண்மனை பாகம் 1 படத்தை உதயநிதி அவர்கள் வெளியிட்டார். தற்போது அரண்மனை 3 திரைப்படத்தை பிரம்மாண்டமான முறையில் வெளியிடுகிறார். இந்த படத்தை பார்த்த ஒரே நபர் உதயநிதி அவர்கள் மட்டும்தான்.
அரண்மனை 1 படத்தை பார்த்து கண்டிப்பாக வெற்றி பெறும் என்று சொன்னவரும் அவர்தான். தற்போது அரண்மனை 3 படத்தை பார்த்துவிட்டு அருமைக இருக்கிறது என்று சொன்னவரும் அவர்தான். 

என்னுடைய படங்கள் எல்லாமே கமர்சியல் படங்கள்தான். படத்தைப் பார்க்கின்ற சிறுவர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் அனைவருமே கவலையை மறந்து ரசிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அரண்மனை இரண்டு பாகங்களை விட அரண்மனை 3 பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

‘அரண்மனை 3’ அக்டோபர் 14ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

Tags: aranmanai 3, sundar c, arya, raashi khanna, andrea, yogibabu, sathya

Share via: