‘அரண்மனை 3’ படத்திற்காக பிரம்மாண்ட சண்டைக்காட்சி
19 Nov 2020
'அரண்மனை 3 'படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி!
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை 3' உருவாகி வருகிறது.
இப்படத்திற்காக சென்னை EVP பிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில் பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது.
சுந்தர் சியுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் முதல் முறையாக இணைந்துள்ள இப்படத்தின் உச்சக்கட்ட சண்டைக் காட்சி பதினொரு நாட்கள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளிவந்த சுந்தர்சியின் படங்களில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் மிகப் பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப் படத்துக்கு 2 கோடி செலவில் பிரம்மாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப் படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இக்காட்சியில், ஆர்யா, ராஷி கன்னா, சுந்தர் C, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர். குஜராத்தில் உள்ள ராஜ்கோட், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டமாக பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
2021ல் கோடை விடுமுறையில் இப்படம் வெளிவர உள்ளது.
ஆர்யா
ராஷிகன்னா
சுந்தர்C
ஆண்ட்ரியா
விவேக்
யோகி பாபு
சாக்ஷி அகர்வால்
சம்பத்
மனோபாலா
வின்சன்ட் ஆசோகன்
மதுசூதன் ராவ்
வேல ராமமூர்த்தி
நளினி
விச்சு விஸ்வநாத்
கோலபள்ளி லீலா
மற்றும் பலர்..
Chief Technicians:
டைரக்டர்: சுந்தர்C
DOP: UK செந்தில்குமார்
Music: C.சத்யா
Editor: S.Fenny Oliver S.ஃபென்னி ஆலிவர்
Art Director: பொன்ராஜ்
Fight : பீட்டர் ஹெயின்
PRO: ஜான்சன்
தயாரிப்பு மேற்பார்வை: B.பாலகோபி
Production: அவ்னி சினிமாஸ்
Tags: aranmanai 3, sundar c, arya, raashi khanna, andrea, yogibabu, sathya