தன்னை எதிர்ப்பவர்களுக்கு ‘நடுவிரல்’ காட்டிய சமந்தா

Release Date:28 Sep 2018
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தெலுங்குத் திரையுலகின் மதிப்பு மிக்க நடிகராக இருந்து மறைந்த அக்கினேனி நாகேஸ்வரராவ் பேரன் நாக சைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டவர். தற்போது சமந்தாவும், அவருடைய கணவர் நாகசைதன்யாவும் ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாவில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு சமந்தா அவருடைய இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கிளாமராக உடை அணிந்த புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டார். அதற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. திருமணத்திற்குப் பிறகு இம்மாதிரியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது சரியில்லை, அக்கினேனி குடும்பத்திற்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறதென்று பலரும் குற்றம் சாட்டினர். சிலர் வரம்பு மீறிய கமெண்ட்டுகளையும் பதிவிட்டனர். இருப்பினும் சமந்தா அது போன்ற புகைப்படங்களை அடுத்தடுத்து பதிவிட்டார். நேற்று கணவர் நாகசைதன்யாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார். அது மட்டுமல்லாமல், தன் மீது விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “திருமணத்திற்குப் பிறகு நான் எப்படி வாழவேண்டும் என்று சொல்பவர்களுக்கு,” என்று சொல்லி ‘நடுவிரல்’ காட்டும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். சமந்தாவின் இந்த செயல் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.   https://www.instagram.com/p/BoJukSTHKMa/?taken-by=samantharuthprabhuoffl https://www.instagram.com/p/BoKDva0nwUP/?taken-by=samantharuthprabhuoffl https://www.instagram.com/p/BoOTLdinfUT/?taken-by=samantharuthprabhuoffl  

Share via: